Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற அண்ணாமலை - ஆளுநரை பார்க்க ஓடிய ஸ்டாலின் !

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற அண்ணாமலை  - ஆளுநரை பார்க்க ஓடிய ஸ்டாலின் !

Mohan RajBy : Mohan Raj

  |  13 Oct 2021 3:15 PM GMT

அண்ணாமலையை தொடர்ந்து ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் பார்க்க விரைந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என்.ரவியை நேற்றையதினம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் உடனிருந்தனர். அந்த சந்திப்பின்போது தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், சமீபத்தில் நடந்துள்ள கொலைகள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

இன்று மாலை திடீரென ஆளுநரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆளுநர் விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் ஆளுநர் சந்திப்பின்போது தி.மு.க மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகனும் உடனிருந்தார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News