முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உண்ணாவிரத இருக்க அண்ணாமலைக்கு அனுமதி மறுத்த காவல்துறை - அடுத்து என்ன?
கொளத்தூரில் உண்ணாவிரதம் இருக்க அண்ணாமலைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
By : Mohan Raj
கொளத்தூரில் உண்ணாவிரதம் இருக்க அண்ணாமலைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க சார்பில் வருகிற ஐந்தாம் தேதி தி.மு.க அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.
எதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி ஆனால் கொளத்தூர் தொகுதியில் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளார், ஆனால் அங்கு உண்ணாவிரதம் இருக்க போலீசார் மறுத்து விட்டனர்.
பா.ஜ.க எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்துவதால் கொளத்தூர் தொகுதியை கேட்டுள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தை பா.ஜ.க அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்துள்ளது.
கொளத்தூரில் உண்ணாவிரத போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அடுத்தது என்ன செய்யலாம் என அண்ணாமலை தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.