'இன்னும் பத்து வருஷம் கழிச்சு பாருங்க' - தி,மு.க'விற்கு கெடு விதித்த அண்ணாமலை
'இன்னும் 10 வருடம் தான்' என தி.மு.க கட்சிக்கு அண்ணாமலை கேடு விதித்துள்ளார்.
By : Mohan Raj
'இன்னும் 10 வருடம் தான்' என தி.மு.க கட்சிக்கு அண்ணாமலை கேடு விதித்துள்ளார்.
கோவை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'இலங்கையில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது இலங்கை நாடு என்கிற அடிப்படையில் தமிழ் மக்களின் நலன் கருதி உதவி செய்கிறோம். இங்கு உள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள், இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு இந்தியா மருந்து கொடுத்து வருகிறது அங்கிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது யாழ்ப்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார்.
மேலும், இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ'க்களை தூங்குகிறேன் என தி.மு.க தர்மபுரி எம்.பி செந்தில்குமார் கூறிய கருத்துக்கு பதில் கூறியதாவது, 'ஜனநாயகத்திற்கு எதிரான கட்சியில் சாதாரண தொண்டர்கள் சேர்வதே கடினம் தி.மு.க'வில் இணைவது தற்கொலைக்கு சமம். பா.ஜ.க சிந்தாந்ததால் ஈர்க்கப்பட்டவர் யாரும் வேறு கட்சிக்கு போகமாட்டார்கள். காங்கிரஸ் அறிவதுபோல் தி.மு.க'வும் அழியும். இன்னும் பத்தாண்டுகள் கழித்து தமிழகத்தில் தி.மு.க என்ற கட்சி இருக்காது' என கூறினார்.