Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரோட்டில் அண்ணாமலை கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பேரணி - எதற்கு தெரியுமா?

ஈரோட்டில் மாலை நடைபெறும் சுதந்திர தின விழா பேரணியை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை துவங்கி வைக்கிறார்.

ஈரோட்டில் அண்ணாமலை கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பேரணி  - எதற்கு தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  7 Aug 2022 12:52 PM GMT

ஈரோட்டில் மாலை நடைபெறும் சுதந்திர தின விழா பேரணியை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை துவங்கி வைக்கிறார்.

தமிழக பா.ஜ.க'வின் தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க மதியம் ஈரோட்டுக்கு வருகை புரிந்தார், மேலும் இன்று மாலை இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற உள்ளது.

இந்தப் பேரணியை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து கையில் தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல இருக்கிறார்.

இந்த ஊர்வலம் ஈரோடு டீச்சர்ஸ் காலனி துவங்கி, பெருந்துறை ரோடு வழியாக சக்தி திருமண துரைசாமி திருமண மண்டபத்தில் நிறைவுபெறுகிறது.

பின்னர் அதனை தொடர்ந்து பா.ஜ.க'வின் நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தின விழாவையொட்டி சிறந்த நெசவாளர்களை கௌரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அண்ணாமலை தலைமை தாங்கி நெசவாளர்களை கௌரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார்.



Source - TNBJP

Next Story
கதிர் தொகுப்பு
Trending News