Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் வாக்குறுதிகளை எழுதியது டி.ஆர்.பாலுதான் என்றால் டி.ஆர்.பாலுவை முதலமைச்சராக்கி விடுங்கள்! - அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதிகளை எழுதியது டி.ஆர்.பாலுதான் என்றால் டி.ஆர்.பாலுவை முதலமைச்சராக்கி விடுங்கள்! - அண்ணாமலை

ThangaveluBy : Thangavelu

  |  2 Jun 2022 7:52 AM GMT

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் உள்ள புஷ்பத்தூர் ஊராட்சி வயலூரில் மத்திய அரசின் 8 ஆண்டின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க. தேர்தல் வாக்குறுதி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்கக்கூடாது. ஏன் என்றால் தேர்தல் வாக்குறுதிகளை எழுதியர் டி.ஆர்.பாலுதான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அப்படி என்றால் டி.ஆர்.பாலுவை முதலமைச்சராக்கி விடுங்கள். தமிழகத்தில் எந்த திட்டம் வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கின்றனர்.

மேலும், வயலில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வேஷ்டி, சட்டையுடன் விவசாயம் செய்வது மட்டுமே திராவிட மாடல் ஆட்சியின் ஏமாற்றுவேலை ஆகும். இந்தியாவிலேயே அதிகமான பொய் பேசுவதில் நம்பர் 1 முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கின்றார். விரைவில் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பற்றிய புள்ளி விபரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News