Kathir News
Begin typing your search above and press return to search.

நம் மக்களா பாமரர்கள்? அவர்கள் இன்று உலகில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் - ப.சிதம்பரத்துக்கு முறையான பதிலடி கொடுத்த அண்ணாமலை

நம் மக்களை படிக்காதவர்கள், பாமரர்கள் என அறியாமையில் சொல்லிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை அண்ணாமலை குறிப்பிட்டு பேசியுள்ளார்

நம் மக்களா பாமரர்கள்? அவர்கள் இன்று உலகில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் - ப.சிதம்பரத்துக்கு முறையான பதிலடி கொடுத்த அண்ணாமலை

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2023 11:04 AM GMT

நம் மக்களை படிக்காதவர்கள், பாமரர்கள் என அறியாமையில் சொல்லிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை அண்ணாமலை குறிப்பிட்டு பேசியுள்ளார்

யு.பி.ஐ என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும், கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வசதி பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கூகுள் பே, பேடிஎம் போன்ற செயல்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூ.பி.ஐ பண பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்று தொகை 12.8 லட்சம் கோடியாக உள்ளது இது கடந்த மாதத்தை காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாகும்.

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் தரவுகளின் படி கடந்த அக்டோபர் மாதத்தில் 12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்டோபர் மாதத்தில் முதல் முறை ஒட்டுமொத்தமாக 2022 ஆம் ஆண்டு யு.பி.ஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை எண்ணிக்கை 74 கோடியாகும் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 1.2 லட்சம் கோடி ஆகவும் உள்ளது. இதன்படி கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2022 ஆம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90% அதிகரித்துள்ளது, பரிவர்த்தனை தொகை 76% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தர்மபுரியில் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறும் பொழுது இந்தியா பணம் மதிப்பு இழப்பீடு அறிவித்தவுடன் உலக நாடுகளை விட காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் என்ன கூறினார் தெரியுமா? 'இந்த மக்கள் ஒன்றும் தெரியாதவர்கள், பாமர மக்கள்! இவர்களுக்கு யூ.பி.ஐ என்றால் என்னவென தெரியுமா?' என கூறினார்கள்.

ஆனால் இன்று உலகிலேயே இந்தியா தான் யு.பி.ஐ பரிவர்த்தனையில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவோ லண்டனோ கிடையாது ஆனால் நம் மக்களை படிக்காதவர்கள், பாமரர்கள் என்று ப.சிதம்பரம் கூறி மட்டமாக மதிப்பிட்டார். எப்படி அவர் கூற முடியும் நம் மக்களை படிக்காதவர்கள் பாமரர்கள் என? இன்று எங்கு சென்றாலும் தற்பொழுது அண்ணே ஜி பே இருக்கா? அன்னை போன் பே இருக்கா? அண்ணே நம்பர் குடுங்கன்னு அமௌன்ட் அனுப்பிச்சு விடுறேன் அப்படின்னு சொல்லி நம் மக்கள் அப்கிரேட் ஆகிவிட்டனர்! ஆனால் எதுவும் தெரியாத அமைச்சர் ப.சிதம்பரம் திமிராக அன்று மக்களை பாமர மக்கள் என்று கூறினார்" என அண்ணாமலை ப.சிதம்பரத்தை விளாசி உள்ளார்.


Source - Annalai Meeting



Next Story
கதிர் தொகுப்பு
Trending News