Kathir News
Begin typing your search above and press return to search.

நீங்க போய் டெல்லி'ல கூழை கும்பிடு போட்டுவிட்டு என்னை சங்கி என சொல்கிறீர்களா? - தி.மு.க மேல் பாயும் சீமான்

'டெல்லியில் கூழை கும்பிடு போடுகிறார்கள்' என சீமான் தி.மு.க'வை விமர்சித்துள்ளார்.

நீங்க போய் டெல்லில கூழை கும்பிடு போட்டுவிட்டு என்னை சங்கி என சொல்கிறீர்களா? - தி.மு.க மேல் பாயும் சீமான்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2022 12:12 PM GMT

'டெல்லியில் கூழை கும்பிடு போடுகிறார்கள்' என சீமான் தி.மு.க'வை விமர்சித்துள்ளார்.


வழக்கு ஒன்றில் திருச்சி நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'இலவசங்களால் ஒரு தேசம் எப்போதும் வளராது என்பது அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். இது மக்களின் ஓட்டுகளை பறிப்பதற்கான வெறும் கவர்ச்சி திட்டம்' என்றார்.

திருடன் தான் திருடி விட்டு மற்றவர்களை பார்த்து திருடன் திருடன் என கத்திக்கொண்டு ஓடுவர், அதுபோலதான் உண்மையான சங்கி மற்றவர்களை பார்த்து சங்கி சங்கி என கூறுவான் அந்த வகையில் என்னை பார்த்து சங்கி என்கிறார்கள்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட நலத்திட்ட விழாவிற்கு பிரதமரை கூப்பிடவில்லை, ஆனால் தமிழக முதல்வர் கூப்பிடுகிறார்! இங்கே வீர வசனம் பேசிவிட்டு டெல்லிக்கு சென்று கூழை கும்பிடு போடுகிறார்கள். இவர் கலைஞர் மகன் என்பதால் எங்களுக்கு பயமாக இருக்கிறது' என தமிழக முதல்வர் ஸ்டாலினை சீமான் விமர்சித்துள்ளார்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News