Kathir News
Begin typing your search above and press return to search.

11'ம் வகுப்பு மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மேல்பள்ளிவாசல் பெண்கள் பள்ளி - நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் குரல் !

11ம் வகுப்பு மாணவியை  தற்கொலைக்கு தூண்டிய மேல்பள்ளிவாசல் பெண்கள் பள்ளி - நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் குரல் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 Nov 2021 3:15 PM IST

பிளஸ் 2 மாணவி கவிதாவை தற்கொலைக்கு தூண்டிய மேலபள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை, நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அழகர்சாமி- அழகு தம்பதியினர். இவர்களது மகள் கவிதா, 17 வயதான இவர் இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டில் கவிதா சோகமாக இருந்ததை பார்த்த அவரது தாயார் அழகு, என்ன என கேட்டபோது வீட்டுப்பாடம் செய்யாததால் தனது வகுப்பறை ஆசிரியர் சம்சந்த் நிஷா தன்னை அடித்ததாகவும் அதனால் சோர்வாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் மன வேதனை தாங்காமல் இறுக்கத்துடன் இருந்த மாணவி கவிதா கடந்த 4ம் தேதி எலி மருந்தை குடித்துள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மகள் இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிகிச்சைக்காக பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் கொண்டு சென்ற போது அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து கவிதாவின் தாயார் அழகு இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "மாணவி கவிதாவின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சம்சத்நிஷா, பள்ளி நிர்வாகத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News