Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வரை வரவேற்க தடபுடல் ஏற்பாடு - கூட நெரிசலில் சிக்கி பறிபோன அப்பாவி உயிர்

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைத்துவரப்பட்ட முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை வரவேற்க தடபுடல் ஏற்பாடு - கூட நெரிசலில் சிக்கி பறிபோன அப்பாவி உயிர்

Mohan RajBy : Mohan Raj

  |  1 May 2022 7:45 AM GMT

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அழைத்துவரப்பட்ட முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் நடைபெறவிருந்த அரசு விழாவிற்கு பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்து காரில் மதுரையில் இருந்து தேனி வந்தார் தேனி மாவட்டத்தில் நலத்திட்டங்களை அரசு சார்பில் துவக்கி வைக்க அரசு முறை பயணமாக தேனி வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அப்பகுதி தி.மு.க'வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன் தரப்பில் அருகில் இருந்த குல்லால் குண்டு என்ற ஊரிலிருந்து ஆரோக்கியசாமி என்ற முதியவர் கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் வழியில் அவருக்கு வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அப்பொழுது செம்பட்டி அருகே இந்த கூட்டத்தில் முதல்வரை வரவேற்க முண்டியடித்ததில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அந்த நெரிசலில் சிக்கி ஆரோக்கியசாமி என்ற முதியவர் உயிரிழந்தார்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலினை வரவேற்க தி.மு.க நிர்வாகிகளால் அழைத்து வரப்பட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தகவல் -




Next Story
கதிர் தொகுப்பு
Trending News