Kathir News
Begin typing your search above and press return to search.

என் கருத்தை கேட்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது - தலைமைக்கு சசிதரூர் அட்வைஸ்

நான் சொல்வதைக் கேட்டால் காங்கிரசுக்கு நல்லது என்கின்ற ரீதியில் சசி தரூர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

என் கருத்தை கேட்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது - தலைமைக்கு சசிதரூர் அட்வைஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  30 Aug 2022 11:41 AM GMT

நான் சொல்வதைக் கேட்டால் காங்கிரசுக்கு நல்லது என்கின்ற ரீதியில் சசி தரூர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17'ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் இதை வெளிப்படையான தேர்தல் என கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி சசிகர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக காங்கிரஸ் தலைவர் தொடர்பாக மலையாளத்தில் மாத்ருபூமியில் அவர் எழுதிய கட்டுரை புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.



இந்த கட்டுரையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்பாக அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தி இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் ஆனால் தேர்தல் தொடர்பான தமது கட்டுரையை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.



Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News