Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்சை உடைத்தெறிந்த பா.ஜ.க - இலங்கைக்கு அண்ணாமலை பயண பின்னணி

ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்சை உடைத்தெறிந்த பா.ஜ.க - இலங்கைக்கு அண்ணாமலை பயண பின்னணி

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2022 1:44 PM GMT

நமது இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவை நோக்கி வருகின்றனர். மேலும், அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக இலங்கை, கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் நிற்கதியாய் நிற்கிறது.

உலக நாடுகள் தங்களால் முடிந்த சில உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. அதே சமயம் இந்தியாவும் பணம் மற்றும் கச்சா எண்ணெய், மருந்து உள்ளிட்டவைகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கி வருகிறது. இந்த சூழலுக்கு காரணம் ஆளும் ராஜபக்சே குடும்பம்தான் என்று இலங்கை மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

இதற்கிடையில் தமிழர்களுக்கு சில உதவிகளை செய்வதற்கு தி.மு.க. அரசு சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தமிழகம் சார்பில் ரூ.80 கோடி செலவில் 40 ஆயிரம் டன் அரிசி, மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் வழங்க இருக்கிறோம் என்றார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு திடீர் சென்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து நேரடியாக இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு செல்லும் அவர் அங்கு தமிழர்கள் வசிக்கும் இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். தமிழர்களுக்கு என்ன மாதிரியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அதற்கான தீர்வுகள் என்ன என்பதனையும் கேட்டறிவார். இலங்கை தமிழர்கள் நலனில் அ.தி.மு.க., தி.மு.க., அக்கரை கொண்டிருப்பதாக காட்டிய நிலையில் தற்போது பா.ஜ.க.வையும் அண்ணாமலை இணைத்துள்ளார். தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களையும் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

ஏற்கனவே பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்காக 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். பல்வேறு உதவிகளையும் இலங்கைக்கு இந்திய சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்குள்ள தமிழர்கள் மற்றும் தொழிலாளர்கள் மே 1ல் நடத்தப்படும் மே தின விழாவுக்கு வருகை தரும்படி, பிரதமர் மோடியின் பிரதிநிதியாக தன்னை அழைத்துள்ளனர். அதனை ஏற்று தற்போது இலங்கை சென்றிருப்பதாக அண்ணாமலை கூறினார்.

Source, Image Courtesy: Asianetnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News