Kathir News
Begin typing your search above and press return to search.

கொளுந்தியா மகள் வளைகாப்புக்கு செல்வதால் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு செல்லவில்லை ! - நிதியமைச்சரை வறுத்தெடுத்த அண்ணாமலை!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்த ஒரு வஞ்சகமும் செய்யவில்லை என்று தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கொளுந்தியா மகள் வளைகாப்புக்கு   செல்வதால் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு செல்லவில்லை ! - நிதியமைச்சரை வறுத்தெடுத்த அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  21 Sep 2021 2:31 AM GMT

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்த ஒரு வஞ்சகமும் செய்யவில்லை என்று தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அண்ணாமலை கலந்து கொண்டார். இதன் பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல முறையில் செல்கிறது. வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்றார்.

மேலும், பெட்ரோல், டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது. ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலை கொண்டு வந்தால் 35 ரூபாய் அளவிற்கு குறையும். மாநில அரசு எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒரு நிதித்துறை அமைச்சர், நான் கொளுந்தியா வளைகாப்புக்கு செல்ல இருப்பதால் ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறுகிறார்.

Source: விகடன், Facebook


Image Courtesy:The Hindu


Next Story
கதிர் தொகுப்பு
Trending News