Begin typing your search above and press return to search.
சட்டசபையில் 'ஜெய்ஹிந்த்', பாரத் மாதா கி ஜெய், முழக்கத்தை எழுப்புவோம்.. தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!
சட்டசபையில் ஆளுநர் உரையின் போது ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை திமுக புறக்கணித்துள்ளதற்கு தமிழகத்தில் கண்டனக் குரல் எழுந்துள்ளது. இந்தியாவின் வெற்றி முழக்கத்தை புறக்கணித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
சட்டசபையில் ஆளுநர் உரையின் போது ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை திமுக புறக்கணித்துள்ளதற்கு தமிழகத்தில் கண்டனக் குரல் எழுந்துள்ளது. இந்தியாவின் வெற்றி முழக்கத்தை புறக்கணித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில், ஜெய்ஹிந்த் என்ற தேச உணர்வை திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் இழிவுப்படுத்தி பேசியுள்ளார். தமிழக சட்டசபையில் ஜெய் ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் போன்ற முழக்கத்தை பாஜக உறுப்பினர்கள் எழுப்புவார்கள் எனக் கூறினார்.
மேலும், சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். பிரிவினையை தூண்டும் விதமாக மத்திய அரசை, ஒன்றிய அரசு எனவும் அழைப்பதாகவும் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story