Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம்.. பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் அண்ணாமலை சபதம்.!

பாஜகவின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கூறியுள்ளார்.

பா.ஜ.க. சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம்.. பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் அண்ணாமலை சபதம்.!

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2021 10:05 AM GMT

பாஜகவின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நமது தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது.


நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழி நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.


அழகான மாநிலமான நம் தமிழ்நாடு மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தமிழ் பற்றும், நமது தமிழ் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

ஜெய்ஹிந்த்.. வாழ்க பாரதம்.. வளர்க தமிழ்நாடு.

இவ்வாறு அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News