Kathir News
Begin typing your search above and press return to search.

பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைத்த பா.ஜ.க. நிர்வாகி கைது!

பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைத்த பா.ஜ.க. நிர்வாகி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  24 Jan 2022 10:07 AM GMT

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி அமைந்துள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை வைத்து சென்றதற்காக பாஜக நிர்வாகியை திமுக அரசு கைது செய்துள்ளது.

போளுவாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்து விட்டு சென்றனர். இதனால் அங்கு இருந்த திமுகவினர் பாஜகவினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானதாக கூறப்படுகிறது. இதனிடையே பாஜக நிர்வாகி பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமரின் புகைப்படத்தை வைத்ததற்காக கைது செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News