Kathir News
Begin typing your search above and press return to search.

மணிப்பூர் தேர்தல்: காங்கிரஸ் நபர் துப்பாக்கியால் சுட்டதில் பா.ஜ.க. பிரமுகர் உயிரிழப்பு!

மணிப்பூர் தேர்தல்: காங்கிரஸ் நபர் துப்பாக்கியால் சுட்டதில் பா.ஜ.க. பிரமுகர் உயிரிழப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2022 12:53 PM GMT

மணிப்பூர் மாநிலத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது நடைபெற்ற வன்முறையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர் துப்பாக்கியால் சுட்டத்தில் பாஜக பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பாஜக பிரமுகர் வீடுகளில் நாட்டு வெடிகுண்டையும் வீசி ரகளையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் உள்ள 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி 38 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் இருந்த 22 தொகுதிகளுக்கான தொகுதியில் வாக்குப்பதிவு மாலையுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு காலை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் வேண்டும் என்றே வன்முறையில் ஈடுபட்டனர். அதே சமயம் பாஜக பிரமுகரான அமுபா சிங் என்பவர் இம்பாலில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் வீட்டிற்கு சென்று வாக்குப்பதிவு தொடங்கும் சமயத்தில் பரப்புரை மேற்கொள்ள கூடாது என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் நபர் துப்பாக்கியை எடுத்து பாஜக பிரமுகர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த பாஜக தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் பாஜக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News