Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா.!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணியானது கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாள்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
By : Thangavelu
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணியானது கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாள்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுடைய இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மற்றும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்.
Next Story