Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் வாக்குறுதியை மறந்த தி.மு.க'வை கண்டித்து தமிழகம் முழுவதும் களமிறங்கிய பா.ஜ.க

தேர்தல் வாக்குறுதியை மறந்த தி.மு.கவை கண்டித்து தமிழகம் முழுவதும் களமிறங்கிய பா.ஜ.க

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2022 8:26 AM GMT

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை எனவும், அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பாக இன்று (ஜூலை 5) மிகப்பெரிய உண்ணாவிதர போராட்டம் நடைபெற்று வருகிறது.


சென்னை மாநகரில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டு இருந்தது. வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு தி.மு.க. அரசு அனுமதி வழங்கவில்லை.


இதன் பின்னர் வள்ளூர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வள்ளூர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும், திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொள்கிறார். அதே போன்று திருவண்ணாமலையில் பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News