Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் இந்த 10 இடங்களில் பா.ம.க., போராட்டம்.. ஜி.கே.மணி அறிவிப்பு.!

சென்னையில் இந்த 10 இடங்களில் பா.ம.க., போராட்டம்.. ஜி.கே.மணி அறிவிப்பு.!

சென்னையில் இந்த 10 இடங்களில் பா.ம.க., போராட்டம்.. ஜி.கே.மணி அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2020 12:29 PM GMT

வருகின்ற 30ம் தேதி அன்று சென்னையில் 10 இடங்களில் பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம், அமைந்தகரை, எழும்பூர், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி ஆகிய 10 இடங்களில் போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகின்ற 30ம் தேதி, ஒன்றியங்களில் உள்ள பிடிஓ அலுவலகங்கள் முன்பு அறப்போராட்டம் நடத்துகிறது பாமக.

இதனை முன்னிட்டு, இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களிலும் மிக அதிகளவில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று வன்னியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News