Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜ.க. வலுபெறுகிறது: பிரதமர் மோடி பேச்சு!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜ.க. வலுபெறுகிறது: பிரதமர் மோடி பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  6 April 2022 9:32 AM GMT

பாஜகவின் 42வது நிறுவன தினத்தையொட்டி அக்கட்சி தொண்டர்களிடம் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நவராத்திரி நாளில் 5வது நாள் இன்று அனைவரும் துர்கை அம்மனை வழிபடுகிறோம். துர்கை அம்மன் தாமரை இருக்கையில் அமர்ந்து இரண்டு கைகளில் தாமரை மலர்களை வைத்துக்கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் அம்மனின் ஆசி நாட்டு மக்கள் அனைவருக்கும், பாஜக தொண்டர்களுக்கும் கிடைப்பதற்கு பிரார்த்தனை செய்கிறேன். மேலும், இந்த வருடம் நிறுவன தினம் மிகவும் முக்கியமானது. அதே பாஜகவின் இரட்டை இன்ஞ்சின் அரசு 4 மாநிலங்களில் அமைத்துள்ளோம். மாநிலங்கள் வேறாக இருக்கலாம் ஆனால் குடும்ப அரசியல் மூலம் அவர்கள் ஒன்றுபடுகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் பாஜக வலுப்பெற்று வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News