Kathir News
Begin typing your search above and press return to search.

அன்புக்குரிய தமிழக மக்களுக்கு பா.ஜ.க.வின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்: அண்ணாமலை!

தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அன்புக்குரிய தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நம் இந்திய மக்கள் அனைவரும் ஒரு புத்துணர்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.

அன்புக்குரிய தமிழக மக்களுக்கு பா.ஜ.க.வின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்: அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  3 Nov 2021 3:36 AM GMT

தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அன்புக்குரிய தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நம் இந்திய மக்கள் அனைவரும் ஒரு புத்துணர்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.

உலகின் மற்ற நாடுகள் கலங்கி நிற்கும் இந்த காலகட்டத்தில், நம் வாழ்வியல் முறையையே மாற்றிப் போட்ட கொடிய தொற்று நோய் கொரோனா மூன்றாம் அலை வீச்சை முடித்து வைக்க ஒரு தொலை நோக்குத் திட்டம் தீட்டி, நம் இந்திய நாடு, நம் அன்பிற்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையில் இந்த நோய்த்தொற்றை திறமையாக எதிர்கொண்டது. இப்போது நாடு முழுவதும் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய தன்னம்பிக்கையில் அரசும், மக்களும் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.


தீபத்தின் ஒளி ஏற்றிதானே நாம் கொரோனாவிற்கு எதிராக தன்னம்பிக்கை வளத்தோம். அந்த தீபத்தின் ஒளி நம் நம்பிக்கையை கைவிடாது. இந்த தீபாவளித் திருநாளில் தீமைகள் பொய்த்துப் போய் நன்மைகள் கொண்டாடக் காரணம் நரகாசுரன் என்ற அரக்கன் மாண்ட தினம் மட்டுமல்ல, துன்பங்கள் விலகி ஒளி பிறக்கும் நம்பிக்கையை ஊட்டும் நன்னாள் இன்று.


பாரதப் பெருமைகளைப் போற்றும் பிரதமர் மோடி அவர்களின் தன்னலமற்ற சீரிய தலைமையில் நம்நாடு உலகின் உயர்ந்த நாடுகளுக்கு சவால்விடும் வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா தன்னிறைவாக நம் இந்திய மக்களுக்குத் தேவையான மருந்தைக் தயாரித்ததோடு மட்டுமல்லாமல், மற்ற உலக நாடுகளுக்கும் நம் கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்துகள் தடை இல்லாது வழங்கப்பட்டது. மேலை நாடுகள், நம் பாரதப் பிரதமரின் தொலைநோக்கைக் கண்டு வியந்தன. இந்தச் சாதனையால் நம் இந்தியா உலகின் ஆன்மீக குருவாக மட்டுமல்ல அறிவியல் உருவாகவும் அறியப்படுகிறது.


நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் உன்னதமான ஆட்சியில் சுய தொழில், வேலைவாய்ப்பில், விவசாயத்தில், அறிவியல், தொழிற்சாலை, வணிகம், விவசாயம், போக்குவரத்து, சுற்றுச் சூழல், மற்றும் சுகாதாரத்துறைகளில் இந்தியா இதுவரை காணாத முன்னேற்றத்தை நோக்கி பீடுநடை போடுகிறது.

இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு வழங்கும் உன்னத இலக்கை நோக்கி மத்திய பாஜக ஆட்சியில் திட்டங்கள் விரைவாக நடைபெறும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தீமைகளைப் பொசுக்கி, தடைகளை நசுக்கி, நன்மைகளை பெருக்கி, நலங்களை வழங்கும் இந்த தீபாவளித் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எங்கள் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம் ஒற்றுமை உணர்வையும், சகோதர வாஞ்சையையும் கட்டிக்காத்து ஆதிக்க அந்நிய சக்திகளை அப்புறப்படுத்தி வெற்றி கொள்ளும் நாளாக இந்த தீபாவளி அமையட்டும். இந்தியத் திருநாட்டின் எல்லைகளில் நமக்காகப் போராடும் இராணுவ வீரர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News