Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பத்தூரில் மணல் அள்ளிய கும்பலை சுற்றி வளைத்த போலீசார் - அரசியல் பிரமுகர்கள் பின்னணியா?

Breaking News.

திருப்பத்தூரில் மணல் அள்ளிய கும்பலை சுற்றி வளைத்த போலீசார் - அரசியல் பிரமுகர்கள் பின்னணியா?

Mohan RajBy : Mohan Raj

  |  25 Aug 2021 4:15 PM GMT

திருப்பத்தூர் பகுதியில் மணல் கடத்தலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. அந்த மனைகளில் கொட்டவும், சாலை அமைக்கவும் ராஜமங்களம் ஏரியிலிருந்து மணல் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அரசின் அனுமதியின்றி ஆகஸ்ட் 23ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மணல் கடத்திவந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்துள்ளார். அதேபோல் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி வண்டியையும் பறிமுதல் செய்துள்ளார். இந்தப் பணியில் ஈடுபட்ட இரண்டு பேரை எஸ்.பி.யின் தனிப்படை போலீசார் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஓட்டுனர்கள் மட்டுமே! ஆனால் இதன் பின்னணியில் அரசியல் புள்ளிகள் கண்டிப்பாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Source - நக்கீரன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News