Kathir News
Begin typing your search above and press return to search.

தாயார் இறந்த சோக தருணத்திலும் உதவி கேட்ட பெண்ணிற்கு உடனே கைகொடுத்த ஆளுநர் தமிழிசை !

கடந்த வாரம் ஆளுநர் தமிழிசை'யின் தாயார் இயற்கை எய்தினார். அவரின் இறுதி சடங்குகளை நடத்தி முடித்து அவர் தற்பொழுது சென்னையில் உள்ளார்.

தாயார் இறந்த சோக தருணத்திலும் உதவி கேட்ட பெண்ணிற்கு உடனே கைகொடுத்த ஆளுநர் தமிழிசை !

Mohan RajBy : Mohan Raj

  |  23 Aug 2021 7:00 AM GMT

தன் தாயார் இறந்த சோகத்தின் தருணத்திலும் உதவி கேட்ட பெண்ணுக்கு உடனே உதவிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த வாரம் ஆளுநர் தமிழிசை'யின் தாயார் இயற்கை எய்தினார். அவரின் இறுதி சடங்குகளை நடத்தி முடித்து அவர் தற்பொழுது சென்னையில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு இரவு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. இதன் காரணமாக அந்த பெண்ணின் குடும்பத்தினர், இந்த அவசர உதவி குறித்து டுவிட்டர் மூலம் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோரிக்கை விடுத்தனர்.

உடனே தன் தாயாரை இழந்த சோகத்திலும் மருத்துவ உதவி கோரிய அப்பெண்ணிற்கு உதவ சுகாதாரத்துறை செயலாளர் அருண் அவர்களை தொடர்பு கொண்டு உத்தரவிட்டார்.

இதனால் சிகிச்சை பெறும் அப்பெண்ணிற்கு உடனே வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை உதவி கிடைத்தது. தன் தாயை இழந்ந சோகத்திலும் உதவி கேட்பவரின் நிலைமையை புரிந்து கொண்டு உதவிய தமிழிசை மூவர் அவர்களின் செயலை அனைத்து தரப்பினரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

One India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News