Kathir News
Begin typing your search above and press return to search.

திருமாவளவனின் பிறந்த நாள் விழா : வரைமுறை இல்லாமல் கவிஞர் மணிகண்டன் என்பவர் வாழ்த்தியுள்ளார் !

Thiruma's BirthDay.

திருமாவளவனின் பிறந்த நாள் விழா :   வரைமுறை இல்லாமல் கவிஞர் மணிகண்டன் என்பவர் வாழ்த்தியுள்ளார் !

Mohan RajBy : Mohan Raj

  |  20 Aug 2021 5:01 AM GMT

"பட்டையையும், கொட்டையையும் பாதுகாக்கக் கூடிய ஒரே ஆள் திருமாவளவன்தான்" என வரைமுறை இல்லாமல் கவிஞர் மணிகண்டன் என்பவர் வாழ்த்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் 59'வது பிறந்த நாள் சென்னை பெரியார் திடலில் அவரின் கட்சியினரால் கொண்டாடப்பட்டது.

அப்போது கவிசர் மணிகண்டன் என்பவர் மைக் பிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே சிரித்து வயிறு புண்ணாகும் அளவிற்கு வாழ்த்து என்ற பெயரில் பேசினார். அந்த கூட்டத்தில் பேசிய மணிகண்டன் கூறியதாவது, "எங்கே செல்கிறீர்கள் எனக்கேட்டார்கள். பெரியார் திடலுக்கு என்றேன். பட்டையும் கொட்டையுமாக செல்கிறாயே எனக் கேட்டார்கள். பட்டையையும், கொட்டையையும் பாதுகாக்கக் கூடிய ஒரே ஆள் அண்ணன் திருமாவளவன் தான் என்றேன். கொரோனாவில் அவர் பெயரில் உள்ள கிருமிநாசியை ஊற்றிக் கொண்டால் எந்த கிறுமியும் அண்டாதுடா என்றேன். கோவிட்டை விட சக்தி வாய்ந்த ஊசி திருமாவளவன் என்ற ஊசி என்றேன்.

திருமாவளவனை பற்றி அது படித்தவன், அப்படிப்படித்தவன் என்றெல்லாம் எனக்கு வாழ்த்த தெரியாது. நான் நாடோடி மாதிரி, தேசாந்திரி மாதிரி. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஒரு முதலமைச்சர் பக்கத்திலேயே 10 வருஷம் இருந்தவன். நான் அம்மா ஆளு. நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் மானமுள்ள தமிழச்சியின் மார்பில் பால் குடித்து வளர்ந்தவன்.ஒரு பேச்சாளருக்கு சரிக்கு சமமாக நாற்காலி கொடுத்து சரியாசனமாக உட்கார வைத்த ஒரே தலைவன் நீதான். நீ அஹ்ரஹாரத்து அம்பேத்கர்" என புகழ்ந்து பேசுகிறேன் என்ற பெயரில் காமெடி செய்துள்ளார் கவிஞர் மணிகண்டன்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News