பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.. மத்திய அமைச்சர் அமித்ஷா.!
மறைந்த எம்.ஜி.ஆரை பற்றி சொல்லியாக வேண்டும். அவர் மக்களின் உண்மையான தலைவராக விளங்கியவர். தன்னோட வாழ்க்கையை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தவர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைப்பார்கள். தற்போது நடைபெறும் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிரிலுள்ள ஊழல் கூட்டணிக்கும் இடையே போட்டி நடக்கிறது.
இந்த நேரத்தில் மறைந்த எம்.ஜி.ஆரை பற்றி சொல்லியாக வேண்டும். அவர் மக்களின் உண்மையான தலைவராக விளங்கியவர். தன்னோட வாழ்க்கையை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தவர். அதன் பின்னர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் பின்தொடர்ந்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றார். அதே போன்று தற்போது வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றனர்.
திமுக, காங்கிரஸ் என்றாலே ரவுடிசம், லஞ்சம், லாவண்யம், நில அபகரிப்பு மற்றும் குடும்பத்தின் ஆதிக்கம் இவற்றை செய்து வந்தனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எம்.ஜி.ஆர்., வழியில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் நல்ல பாதையில் தமிழகத்தை கொண்டு செல்லும்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவை சேர்ந்த ராசா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை மிகவும் தரக்குறைவாக பேசினார். தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக தரக்குறைவான வார்த்தைகளை திமுகவினர் பேசி வருகின்றனர். எனவே வரும் காலங்களில் திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள். மீண்டும் அதிமுக அரசு அமையும். இவ்வாறு அவர் கூறினார்.