Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும், அதிமுக மட்டும் 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2021 10:22 AM IST

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தொடங்கியது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும், அதிமுக மட்டும் 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.





இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக யாரை தேந்தெடுப்பது என்பது குறித்து, வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

அந்த கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து கூட்டம் மீண்டும் திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூடியுள்ளனர். யார் எதிர்க்கட்சித்தலைவர் என்பது முடிவாகும். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News