Kathir News
Begin typing your search above and press return to search.

5 மாநில தேர்தல் முடிவு: சென்னை கமலாலயத்தில் விழா கோலம்: காத்து வாங்கும் காங்கிரஸ் அலுவலகம்!

5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. எனவே வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடியே வெற்றி பெறுவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

5 மாநில தேர்தல் முடிவு: சென்னை கமலாலயத்தில் விழா கோலம்: காத்து வாங்கும் காங்கிரஸ் அலுவலகம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 6:46 AM GMT

5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. எனவே வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடியே வெற்றி பெறுவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

அதன்படி கோவா, பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்க உள்ளது. காங்கிரஸ் 5 மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கமலாலயலம் விழாகோலம் பூண்டுள்ளது. அதே போன்று காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் யாருமே தலை காட்டாமல் காத்து வாங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News