Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய கவுன்சிலர்களுக்காக ரிப்பன் மாளிகை புதுப்பிப்பு!

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை நாட்டிலேயே மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் சுமார் 334 ஆண்டுகள் பாரம்பரியமிக்கவை ஆகும். கடந்த 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி கட்டப்பட்டது.

புதிய கவுன்சிலர்களுக்காக ரிப்பன் மாளிகை புதுப்பிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  22 Feb 2022 11:43 AM GMT

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை நாட்டிலேயே மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் சுமார் 334 ஆண்டுகள் பாரம்பரியமிக்கவை ஆகும். கடந்த 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி கட்டப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்காக தற்போது அரங்கம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இருந்தே பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

நீண்டகாலமாக தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் உள்அரங்கம் தூசிகளால் நிரம்பியுள்ளது. இதனால் சுவர்களுக்கு புதிய வர்ணம் மற்றும் மேஜை, நாற்காலிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 200 கவுன்சிலர்களும் மார்ச் 2ம் தேதி மாமன்ற அரங்கில் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy: Deccan Chronicle

Next Story
கதிர் தொகுப்பு
Trending News