சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் - என் இப்படி கூறினார் முதல்வர் ஸ்டாலின்
ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By : Mohan Raj
ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு பொம்மை கூட்டமேடு பகுதியில் நடைபெற்றது.
இதை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் மாநாட்டில் பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'உள்ளாட்சி பிரதிநிதிகள் சட்டப்படி, நியாயப்படி விதிகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கீனமாக நடந்தால் நான் சர்வாதிகாரியாக மாரி நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தின் எதிர்காலம் என்பது தி.மு.க கைகளில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலை செய்யக்கூடாது யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாம் தலைகுனியக் கூடாது.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒற்றுமை முதலில் தேவை அந்த ஒற்றுமை இல்லை எனில் அனைத்து பணிகளும் முடங்கிவிடும், வெறுப்பை ஒதுக்கி வைத்து மக்கள் பணியை உறுதி செய்ய வேண்டும். ஒற்றுமையாக இருங்கள் ஊருக்காக உழையுங்கள்' என பேசினார் முதல்வர் ஸ்டாலின்.