"அ.தி.மு.க அரசுடன் இணைந்து போராட தயார்" என்று ஏன் ஸ்டாலின் கூறுகிறார்?
"அ.தி.மு.க அரசுடன் இணைந்து போராட தயார்" என்று ஏன் ஸ்டாலின் கூறுகிறார்?

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 2018'ம் ஆண்டு வயநு மூப்பின் காரணதாக இயற்றை எய்தினார். அதன் பிறகு தி.மு.க தலைவர் அரியணையை கடும் சகோதர போட்டிகளுக்கு இடையில் ஸ்டாலின் கைப்பற்றினார். இதன் பிறகு தி.மு.க'விற்கு இறங்கு முகம்தான் என்பதை தி.மு.க'வை நன்கு அறிந்தவர்கள் கூறுவர்.
அதிகரித்த மூத்த உடன்பிறப்புகளின் அதிருப்பதி, மக்கள் மத்தியில் தி.மு.க என்றால் ஊழல் கட்சி என்ற உண்மையை மற்க்க முடியாத இயலாமை, வறட்சி காரணமாக தி.மு.க உடன்பிறப்புகள் ரோட்டோர கடை முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை திருட்டு கைவரிசை காண்பிக்க அதை கண்டிக்க வக்கு இல்லாத தன்மை, பொதாக்குறைக்கு ஸ்டாலினை விட கட்சியில் சீக்கிரம் முன்னேறிவிட வேண்டும் என்ற ஸ்டாலின் மகனான உதயநிதியின் ஆவல் இவையனைத்தும் ஸ்டாலினை நிலைகுலைய செய்துவிட்டன.
இது போதாமல் எதிர்பாரா நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி'யின் விஸ்வரூபம் வேறு ஸ்டாலினின் தூக்கம் தொலைய காரணமாகி விட்டது. சரி இதெல்லாம் அரசியல் சாதாரணம் பொது வாழ்க்கையில் இயல்பு என தனக்குதானே ஆறுதர் கூறி ஸ்டாலின் பணிகளை தொடர்ந்த நிலையில் தலையில் இடி விழும் அளிவிற்கு இருந்நது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்'ன் அரசியல் பிரவேச அறிவிப்பு. என்னடா இது இரண்டி அடி வைத்தால் நான்கு இடி விழுகிறதே என நிலைகுலைந்து போனார் முத்தமிழறிஞர் மகன்.
இந்த நிலையில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் எடப்பாடி அரசுடன் இணைந்து போராட தயார் என்பதே அது. அந்த அறிக்கையில், "மருத்துவக் கல்வி - நீட் தேர்வால் பாதிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு - 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது - தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு - ஒப்புதல் அளிப்பது - தொடர்பாக. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை சிதைக்கும் நீட் தேர்வினை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானமான கோரிக்கை என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அக்கோரிக்கை நிறைவேறும் வரை, 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆராய, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. கலையரசன் அவர்கள் தலைமையில் மூத்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் "எம்.பி.பி.எஸ் மற்றும் நீட் தேர்வு மாநிலத்தில் தகுதித் தேர்வாக குறித்துரைக்கப்பட்டுள்ள பிற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை" அளிப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்களுக்கிடையே ஒரு சமத்துவத்தைக் கொண்டு வரலாம் என தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டது.
மேற்கண்ட முடிவின் அடிப்படையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும்'Tamilnadu admission to under graduate courses in medicine, dentistry, indian medicine and homepathy on preferential basis to the students of the government bill 2020' என்ற சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு- கடந்த 15.9.2020 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16.10.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்த கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட முடியும். ஆகவே, இந்தச் சட்ட முன்வடிவினை ஆதரித்து நிறைவேற்றிய பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மேற்கண்ட சட்டமுன்வடிவிற்கு உடனடியாகத் தாங்கள் ஒப்புதல் அளித்து - அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என கடித வடிவில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் தி.மு.க தனித்து நின்று போராடியிருக்கிறது ஆனால் மறைந்த கருணாநிதி அவர்கள் எந்த நிலையிலும் அ.தி.மு.க'வுடன் இணைந்து போராட தயார் என கூறியதில்ல காரணம் கருணாநிதி'யின் தலைமை பண்பு. ஆனால் அவரது வாரிசு, அவரை போல் நான் என கூறிக்கொண்டு அவரின் இருக்கையில் அமர்ந்த ஸ்டாலின் அவரை கேவலப்படுத்தும் விதமாக இப்படி அறிக்கை விடுத்துள்ளதாக கருணாநிதி'யின் தீவிர அரசியல் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.