Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் புடைசூழ தமிழகத்தில் மலரும் தாமரை - பெண்களின் பாதுகாவலனாக உருவெடுக்கும் பா.ஜ.க.!

பெண்கள் புடைசூழ தமிழகத்தில் மலரும் தாமரை - பெண்களின் பாதுகாவலனாக உருவெடுக்கும் பா.ஜ.க.!

பெண்கள் புடைசூழ தமிழகத்தில் மலரும் தாமரை - பெண்களின் பாதுகாவலனாக உருவெடுக்கும் பா.ஜ.க.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2020 9:34 PM GMT

தமிழக வரலாற்றில் இதுவரை கோலாச்சிய கட்சிகள் அனைத்துமே பெண்களை மையப்படுத்தியும், பெண்களை போற்றியும், பெண்கள் பங்குபெற்றும் அரசியல் அரங்கில் வழி நடத்தப்பட்டவை ஆகும். அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் பெண்களை மையப்படுத்தியும், போராட்டங்களில் பெண்கள் பங்குபெற்றதன் மூலம் ஒரு கட்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்றால் அது பா.ஜ.க மட்டுமே.

இந்துக்களுக்கு ஒன்றென்றால் உடனே வருவது போல் பெண்களுக்கு ஒரு அவப்பெயரோ அல்லது அநீதி இழைக்கப்படும் போதோ உடனே வந்து குரல் கொடுப்பதாகட்டும், கண்டனம் தெரிவிப்பதாகட்டும், அவர்களை வழிநடத்த போராட்டங்களில் ஈடுபடுவதாகட்டும் பா.ஜ.க பெண்கள் மத்தியில் நல்மதிப்பை பெற்று நல்விதமாக வலம் வருகிறது.

சிதம்பரத்தில் தெற்கு திட்டை தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ் ஜாதியை காரணம் காட்டி ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை தரையில் அமரச்செய்து அவமதிக்கப்பட்ட விவகாரமாகட்டும் அதில் முன்நின்று அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை ஓடி சென்று முதலில் பார்த்து அவருக்கு உதவிக்கரம் நீட்டியது பா.ஜ.க மட்டுமே.

அதேபோல் மற்றொரு சம்பவத்தில் செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண்ணை தி.மு.க நிர்வாகி தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தை அந்த பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க களத்தில் நின்று போராடியதும் பா.ஜ.க'வே!

இப்பொழுதும் திருமாவளவன் இந்து பெண்கள் விபச்சாரிகள் என்ற கருத்தை திமிராக கூறியதையும் 'எப்படி எங்கள் இந்துக்கள் வீட்டு பெண்களை நீ தவறாக கூறலாம்' என போராட்ட களத்தில் இறங்கியதும் பா.ஜ.க'வே இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இன்று தமிழகம் தழுவி நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் அறைகூவலுடன் ஆக்ரோஷமாக பா.ஜ.க சார்பில் ஈடுபட்டது தமிழ பெண்கள் மத்தியில் பா.ஜ.க பெற்று வரும் நல்மதிப்பையும், உயர்வான எண்ணத்தையும் காட்டுகிறது.

அரசியல் அரங்கில் ஆண்கள் கோலோச்சி வரும் மற்ற கட்சிகள் மத்தியில் பெண்கள் பங்குபெற்று ஒரு போராட்டத்தை எடுத்து நடத்துகின்றனர் எனில் அது பா.ஜ.க'விற்கு பெண்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான நல்மதிப்பை காட்டுகிறது.

இப்படி பெண்கள் புடைசூழ பா.ஜ.க தமிழக அரசியல் அரங்கில் பல சாதனை படைக்க தொடங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News