நெல்லை: சாரல் மழையில் நனைந்தவாறு பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்.!
விருதுநகர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், இன்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து சாரல் மழையில் நனைந்தபடியே பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று விருதுநகர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், இன்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து சாரல் மழையில் நனைந்தபடியே பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சாரல் மழை பெய்தது. இதில் முதலமைச்சர் நனைந்தபடியே பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, திமுக கட்சிக்கு வாக்களித்தால் நாடு பின்னோக்கி சென்றுவிடும், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் அட்டூழியம் பெருகிவிடும். மேலும், காற்றைப்போன்று கண்ணுக்குத் தெரியாமல் ஊழல் செய்யும் கட்சியாகத்தான் திமுக உள்ளது.
எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.