Kathir News
Begin typing your search above and press return to search.

உண்மையை சொல்லி ஓட்டு கேட்டால் எதிர்க்கட்சியாவது மிஞ்சும்.. ஸ்டாலினுக்கு சவுக்கடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி ஒருபோதும் ஸ்டாலினை நம்பியது இல்லை என்றார்.

உண்மையை சொல்லி ஓட்டு கேட்டால் எதிர்க்கட்சியாவது மிஞ்சும்.. ஸ்டாலினுக்கு சவுக்கடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 March 2021 9:34 AM IST

சென்னையில் உள்ள மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெஞ்சமின், பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னார் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகப்பேர் பகுதியில் பரப்புரை செய்தார்.

அப்போது கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசு பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பச்சைப்பொய் பேசி வருகிறார், வருகின்ற தேர்தலுடன் திமுக இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்.




திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி ஒருபோதும் ஸ்டாலினை நம்பியது இல்லை என்றார். அதிமுகவில் யார் வேண்டும் என்றாலும் உயர்ந்த பதவிக்கு செல்லலாம். ஆனால் திமுகவில் அப்படி இல்லை. மகன், பேரன், இப்படியே அவர்களின் குடும்ப வாரிசு மட்டுமே இருக்கும்.

எனவே வருகின்ற தேர்தலில் இரட்டை இலை, மாம்பழம், தாமரை சின்னத்திற்கு வாக்களித்தால் அனைத்து ஏழை, எளியோர்களின் முன்னேற்றத்திற்கு என்றுமே அம்மாவின் அரசு பாடும்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News