Kathir News
Begin typing your search above and press return to search.

தென்மாவட்டங்களில் நாளை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை.!

இதனையடுத்து அரவக்குறிச்சி, பரமத்தி, வேடசந்தூர் ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர் செம்பட்டி, திண்டுக்கல், நத்தம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

தென்மாவட்டங்களில் நாளை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 March 2021 1:44 PM GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இது குறித்து அதிமுக தலைமை கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 24ம் தேதி அன்று கரூரில் காலை 10.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்.





இதனையடுத்து அரவக்குறிச்சி, பரமத்தி, வேடசந்தூர் ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர் செம்பட்டி, திண்டுக்கல், நத்தம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

அதே போன்று 25ம் தேதி காலை மதுரை கிழக்கு தொகுதி ஒத்தக்கடையில் பிரசாரத்தை தொடங்குகிறார். இதன் பின்னர் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து, காரைக்குடியில் பிரசாரத்தை முடிக்கிறார்.




அதற்கு அடுத்த நாளான 26ம் தேதி காலை திருப்பத்தூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர், சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்கு சேகரித்து, அன்றைய தினம் கடைசியாக கயத்தாறில் பிரசாரத்தை முடிக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News