Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 5 ஆண்டுகள்.. மீண்டும் நல்லாட்சியை தருவேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!

முதலமைச்சராக பணிபுரிந்த 4 ஆண்டு அனுபவத்தால் மீண்டும் செழுமையான ஆட்சியை கொடுப்பேன் என்று தனியார் செய்தி தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகள்.. மீண்டும் நல்லாட்சியை தருவேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2021 6:51 AM GMT

முதலமைச்சராக பணிபுரிந்த 4 ஆண்டு அனுபவத்தால் மீண்டும் செழுமையான ஆட்சியை கொடுப்பேன் என்று தனியார் செய்தி தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே தொலைக்காட்சி சார்பில் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களால் நீர் தேவை தமிழகத்தில் பூர்த்தியாகியுள்ளது. நீர் தேவைக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருந்த நிலையில் மாற்றம் அடைந்துள்ளது.




பல நல்ல திட்டங்களால் மத்திய அரசின் விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் என தமிழக மக்கள் பிரித்து பார்த்து வாக்களிப்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜகவுக்கு அதிமுக தளம் அமைத்து கொடுப்பதாக கூறும் புகார் உண்மையில்லை.




அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி செய்த அனுபவத்தால் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நல்லாட்சியை தருவேன் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News