Kathir News
Begin typing your search above and press return to search.

டிராக்டரில் பேரணியாக சென்று பிரச்சாரம் செய்த முதலமைச்சர்.!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

டிராக்டரில் பேரணியாக சென்று பிரச்சாரம் செய்த முதலமைச்சர்.!

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2021 1:12 PM GMT

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதே போன்று இன்று திருவாரூர் மாவட்டம், குடவாசலில் டிராக்டரில் பேரணியாக சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். நேற்று தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், குடவாசல் எல்லையில் இருந்து பள்ளிவாசல் தெரு, கடைத்தெரு வழியாக பேருந்து நிலையம் வரை டிராக்டரில் பேரணியாக சென்றார்.





அவருடன் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் டிராக்டரில் சென்றார். மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்த படி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News