Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமக்கள் உயிரிழப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.. முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளாவது:

பொதுமக்கள் உயிரிழப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.. முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.!

ThangaveluBy : Thangavelu

  |  14 May 2021 7:57 AM GMT

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளாவது:

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும், அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.








மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News