Kathir News
Begin typing your search above and press return to search.

போதை பொருள் விற்பனைக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போதை பொருள் விற்பனைக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !

ThangaveluBy : Thangavelu

  |  31 Aug 2021 9:50 AM GMT

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பாமக தலைவர் ஜி.கே.மணி, போதை பொருட்கள் விற்பனையை தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் பள்ளி கல்லூரிகளுக்கு முன்னர் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகின்றனர். எனவே பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கான தடை சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டு வந்து முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-says-there-are-severe-penalties-for-selling-drugs-near-schools-and-colleges-sur-548747.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News