Kathir News
Begin typing your search above and press return to search.

'நாங்களும் போடுவோம்ல பொதுக்கூட்டம்' - பொள்ளாச்சியில் பா.ஜ.க'விற்கு போட்டியாக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு தயாரான தி.மு.க

நாங்களும் போடுவோம்ல பொதுக்கூட்டம் - பொள்ளாச்சியில் பா.ஜ.கவிற்கு போட்டியாக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு தயாரான தி.மு.க

ThangaveluBy : Thangavelu

  |  7 July 2022 7:01 AM GMT

பா.ஜ.க.வுக்கு போட்டியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பிரம்மாண்டமாக தி.மு.க. பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மும்முரமாக இறங்கியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால் அக்கூட்டத்தில் ஏராளமானோர்களை திரட்டி பங்கேற்க வைப்பதாக கூறப்படுகிறது. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. தற்போது எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று பா.ஜ.க. புகார் கூறியுள்ளது. இதற்காக நேற்று (ஜூலை 6) தமிழகம் முழுவதும் பா.ஜ.க. அறவழியில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த உண்ணாவிரத பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புகாராக கூறியிருந்தார்.

இந்நிலையில், வருகின்ற 15ம் தேதி கோவை ஈச்சனாரி அருகே நடைபெறவுள்ள அரச விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதனை முடித்துக்கொண்டு அன்று மாலை பொள்ளாச்சியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

ஏற்கனவே பா.ஜ.க. பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை பா.ஜ.க. பொள்ளாச்சியில் நடத்திக்காட்டியது. அதில் பல ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டிருந்தனர். அதற்கு போட்டியாக தி.மு.க.வும் மிக பிரமாண்டமான முறையில் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News