Kathir News
Begin typing your search above and press return to search.

மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சராக்கினால் இப்படிதான் மின்வெட்டு வரும் - அண்ணாமலை!

மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சராக்கினால் இப்படிதான் மின்வெட்டு வரும் - அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2022 8:40 AM GMT

மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சராக்கினால் இப்படிதான் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அண்ணாமலை நேற்று (மே 9) இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம். தருமபுரி எம்.பி. செந்தில்குமார் செய்திக்காக கருத்து கூறுபவர், அவரது கருத்துக்கு நான் எப்படி பதில் சொல்லவது என்றார். மேலும், பா.ஜ.க. சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாருமே மற்ற கட்சிக்கு போக மாட்டார்கள்.

மேலும், தமிழகத்தில் மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவர்கள் எல்லாம் அமைச்சராக்கினால் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News