Kathir News
Begin typing your search above and press return to search.

100 சதவீதம் வாக்குப்பதிவு.. மாண்டு வண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.!

நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.கண்ணன் மாட்டு வண்டியில் சென்று நூதன முறையில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

100 சதவீதம் வாக்குப்பதிவு.. மாண்டு வண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.!

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2021 3:57 AM GMT

நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.கண்ணன் மாட்டு வண்டியில் சென்று நூதன முறையில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் தனது பணிகளை செய்து வருகிறது. அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை பார்த்து வருகிறோம்.

ஆனால், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சென்று வாக்காளர்களிடம் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகிறார். நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் பேசி வருகின்றார். அவரது விழிப்புணர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உடனிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News