தூத்துக்குடியில் 2,097 வாக்குச்சாவடிகள் உள்ளது: ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!
தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட புனித லாசல் மேல்நிலைப்பள்ளி, காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் இந்து அரிசன தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாடி மையங்களை பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி ஆட்சியர் செந்தில்ராஜ், ஏற்கெனவே இருந்த வாக்குச்சாவடிகளை 2ஆக பிரித்ததால், தற்போது மாவட்டத்தில் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 247 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படும் என கூறினார்.