Kathir News
Begin typing your search above and press return to search.

’அப்பா’ என அழைக்கும் அனைவரும் வாருங்கள்.. தொண்டர்களை உருகி உருகி அழைக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்.!

’அப்பா’ என அழைக்கும் அனைவரும் வாருங்கள்.. தொண்டர்களை உருகி உருகி அழைக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்.!

’அப்பா’ என அழைக்கும் அனைவரும் வாருங்கள்.. தொண்டர்களை உருகி உருகி அழைக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2020 8:46 AM GMT

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறியுள்ளது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார். கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்தேன் என்றும் விஜய்க்கும் அரசியல் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்திருந்தார்.

ஆனால் கட்சியின் மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி பத்மநாபன் ராஜினாமா கடிதத்தை அளித்து சந்திரசேகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கட்சி தொடங்கிய 15 நாட்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சி காணாமல் போனது.

இந்நிலையில், சென்னை வடபழனியில் கொரோனா உதவி வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சந்திரசேகர், “சமுக உணர்வுள்ள இளைஞர்களுக்காகவே அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளேன். தன்னை அப்பா என அழைக்கும் அனைவரும் வாருங்கள், பொங்கி எழுங்கள், நல்லது செய்வோம். தன்னுடன் இருப்பவர்களை இருக்காதே என சிலர் கூறி வருகின்றனர். ஆனால் பலர் தன்னுடன் பயணிக்க தயாராக இருக்கின்றனர்’’ என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News