Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிப் படுகொலை: பதற்றமான சூழலில் நீடாமங்கலம்!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் நடேசன் தமிழார்வன், இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகராக உள்ளார். காரில் வந்தபோது மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிப் படுகொலை: பதற்றமான சூழலில் நீடாமங்கலம்!

ThangaveluBy : Thangavelu

  |  11 Nov 2021 10:00 AM GMT

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் நடேசன் தமிழார்வன், இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகராக உள்ளார். காரில் வந்தபோது மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்தவர் நடேச தமிழார்வன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக உள்ளார். மேலும், திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இவரது மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இந்நிலையில், நடேச தமிழார்வான் நேற்று (நவம்பர் 10) மாலை நீடாமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. இவர் நீடாமங்கலம் பகுதியில் பிரபலமானவராக உள்ளார். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த கொலை தொடர்பாக திருவாரூர் எஸ்.பி. விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

அப்பகுதி மக்கள் நடேச தமிழார்வானின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் சகஜமாக நடைபெறுகிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Source, Image Courtesy: Vikatan


Next Story
கதிர் தொகுப்பு
Trending News