Kathir News
Begin typing your search above and press return to search.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு.. நாளை மதுரையில் நல்லடக்கம்.!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு.. நாளை மதுரையில் நல்லடக்கம்.!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு.. நாளை மதுரையில் நல்லடக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2021 11:48 AM GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது உடல் நாளை மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக வலம் வந்தவர் தா.பாண்டியன் இவருக்கு 89 வயதாகிறது. தற்போது சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் சிகிச்சைக்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று இரவு முதல் தகவல் தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அவரது உடல் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டியில் உள்ள கிராமத்தில் நாளை (27ம் தேதி) நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே சென்னை அண்ணாநகரில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News