Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு தி.மு.க. காங்கிரஸ் கட்சியும் துரோகம் இழைத்துள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

தமிழகத்திற்கு தி.மு.க. காங்கிரஸ் கட்சியும் துரோகம் இழைத்துள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

ThangaveluBy : Thangavelu

  |  6 April 2022 12:31 PM GMT

நீட் தேர்வை திணித்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய சுயசார்பு பாரதம் என்ற காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகள் தாக்குதலால் பல்வேறு நாடுகள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பல நாடுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளது. அதில் இருந்து மீள முடியாத நிலையே தொடர்கிறது.

ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு நிலை வரவிடாமல் பிரதமர் மோடி தீவிரமாக பணியாற்றி வருகின்றார். மேலும், நீட் தேர்வு திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான் கொண்டு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News