Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை - காங்கிரஸ் முதலமைச்சர் தடாலடி

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை - காங்கிரஸ் முதலமைச்சர் தடாலடி

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2022 11:52 AM GMT

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான பகையும் இல்லை என்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திடீரென்று பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நேற்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பகையும் இல்லை. சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் என்னை சந்தித்தனர். அப்போது இந்த தகவலை அவர்களிடம் கூறினேன். எனவே பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜியிடமும் சொல்லுங்கள் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

அதே நேரத்தில் வன்முறையை எந்தவித வடிவத்திலும் பொறுத்துக்க முடியாது. வன்முறையை யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆட்சியில் இருக்கும் ஒருவர் எவ்வித சாதியாகவும், கட்சியாகவும் அல்லது மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் அதனை கண்டித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News