Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் அறியாமையில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் - குலாம் நபி அசாத்

'மோடி மிகவும் மனிதாபிமானம் மிக்கவர் அவரை முரட்டுத்தனமானவர் என தவறாக நினைத்து விட்டேன்' என காங்கிரசிலிருந்து சமீபத்தில் விளங்கிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் அறியாமையில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் - குலாம் நபி அசாத்

Mohan RajBy : Mohan Raj

  |  30 Aug 2022 11:58 AM GMT

'மோடி மிகவும் மனிதாபிமானம் மிக்கவர் அவரை முரட்டுத்தனமானவர் என தவறாக நினைத்து விட்டேன்' என காங்கிரசிலிருந்து சமீபத்தில் விளங்கிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் தற்பொழுது காங்கிரஸிலிருந்து விலகிய காரணத்தினால் தனது தனிப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் முன்வைத்து வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் மோடி குறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 'பிரதமர் மோடி குடும்பம் குழந்தைகள் இல்லாதவர் என்பதால் அவரை முரட்டுத்தனமானவர் என கருதினேன் ஆனால் அவர் மனிதாபிமானம் படைத்த மனம் கொண்டவர் என்றுதான் பின்பு உணர்ந்து கொண்டேன். 2007 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதல்வராக நான் இருந்தபோது காஷ்மீர் சுற்றுலா வந்த பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது.

அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி இந்த நிகழ்வைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்கு மாநிலங்களைவையில் நடைபெற்றன பிரிவு உபசார விழாவின் போது பிரதமர் மோடி நினைவு கூர்ந்து உணர்ச்சி வசத்துடன் கண்ணீர் மல்க பேசினார் நானும் கண்ணீர் வடித்தேன் அவரது பேச்சை காங்கிரஸ் சார் அறியாமையுடன் திரித்து பேசுகின்றன இவ்வாறு குலாம் நபி ஆசாத் பிரதமர் மோடி குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News