Kathir News
Begin typing your search above and press return to search.

திருமாவளவனுக்கு மீண்டும் ஒரு பிளாஸ்டிக் சேர் சம்பவம் - இந்தமுறை வழங்கியது எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்

திருமாவளவனுக்கு தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் பிளாஸ்டிக் சேர் கொடுத்ததால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருமாவளவனுக்கு மீண்டும் ஒரு பிளாஸ்டிக் சேர் சம்பவம் - இந்தமுறை வழங்கியது எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jun 2022 1:00 PM GMT

திருமாவளவனுக்கு தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் பிளாஸ்டிக் சேர் கொடுத்ததால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி'யுமான திருமாவளவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்தார் அவரின் இந்த சந்திப்பின்போது ராஜகண்ணப்பன் திருமாவை பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


கூட்டணிக் கட்சி தலைவருக்கு அதுவும் ஒரு எம்.பி'க்கு ஒரு சோபா கூட கொடுக்க முடியவில்லையா என தி.மு.க மீதும், வெளியில்தான் 'திமிறி எழு, திருப்பி அடி' என்பது போன்ற வீர வசனங்கள் எல்லாம் தி.மு.க'விடம் கிடையாதா என திருமாவளவனிடம் கேள்வி எழுப்பி அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அது போல ஒரு சர்ச்சை தோன்றியுள்ளது.



எம்.பி திருமாவளவன் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனை கடந்த 6'ஆம் தேதி கும்பகோணத்தில் நிகழ்ச்சிகளுக்காக கலந்துகொள்ள செல்லும் பொது நேரில் பார்க்க சென்றார்.


அப்பொழுது எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை திருமாவளவன் நேரில் சந்தித்த பொழுது சாக்கோட்டை அன்பழகன் குஷன் சேரில் அமர்ந்திருக்க திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News