Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு: அடையாறு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்.!

ஜாமின் கோரி மீண்டும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு: அடையாறு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 Jun 2021 6:14 PM IST

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். தன்னை போலீசார் கைது செய்வதற்கு முன்பு, முன் ஜாமின் கேட்டு மணிகண்டன் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் கடந்த 16-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.





இதனை தொடர்ந்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் உத்தரவிடப்பட்டுள்ளது.





இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி மீண்டும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜாமின் மனு மீது வருகின்ற 24ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News